
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார்.
மேற்குவங்கத்தின் அலிப்பூர்துவாரில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அலிப்பூர்துவார் மற்றும் கூச்பெஹார் மாவட்டங்களில் ரூ.1,010 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.