
சேலம்: சேலம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவரின் கன்னத்தில் அறைந்து திமுக கவுன்சிலர் சுகாசினி தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து அதிமுகவினர் மாரகராட்சி அலுவலக கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு மற்றும் அவசரக் கூட்டம் இன்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை குறித்து எடுத்துரைத்தனர். அப்போது, மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி எழுந்து, கட்டிட அனுமதி முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் வழங்கப்படுகிறது என குற்றம்சாட்டி பேசினார் .