• May 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள மசூதியின் முன்பாக பொதுச் சாலையில் தொழுகை நடத்தப்படுவதாக கூறி தாக்கல் செய்த மனுவுக்கு சம்பந்தப்பட்ட ஜமாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், விஜேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கோவை மாட்டம் துடியலூரில் ஹிதயத்துல் முஸ்லிமியின் சுன்னத் ஜமாத் மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் முன்பு உள்ள பொதுச் சாலையில் தொழுகை நடைபெறுவதால் அப்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மசூதிக்கு ஏராளமானோர் தொழுக்கைக்கு வருவதால் உள்ளே இட வசதியில்லாமல், சாலையில் தொழுகை நடத்தப்படுகிறது. தொழுகைக்கு வருவோர் தங்களது வாகனங்களையும் சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது,” என்று மனுவில் கூறியிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *