
மாநிலங்களை எம்.பியாக உள்ள புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏற்கெனவே புதுக்கோட்டை எம்.பி தொகுதி பறிபோய் உள்ள நிலையில், தற்போது எம்.பியும் இல்லாததால் அந்த மாவட்ட மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
2004 வரை இருந்த புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி, தொகுதி மறுவரையறையின் மூலம் நீக்கப்பட்டது. அதன்பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியுடனும், ஆலங்குடி, திருமயம் தொகுதிகள் சிவகங்கையுடனும், விராலிமலை தொகுதி கரூர் தொகுதியுடனும், அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரத்துடனும் இணைக்கப் பட்டன.