• May 30, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: புதுச்சேரி அரசு 2003-ம் ஆண்டு முதல் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தை மாநில அரசின் நிதியின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 38,700 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு 2015-ம் ஆண்டு பிரதமர் வீடு கட்டும் திட்டம் (நகர்ப்புறம்) அறிமுகப்படுத்தியபோது, புதுச்சேரி அரசின் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தோடு ஒருங்கிணைத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதிலும் செயல்படுத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் 15,995 வீடுகள் ஒப்புதல் பெறப்பட்டது. கடந்த மார்ச் வரை, 10,928 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,241 வீடுகள் பல்வேறு கட்டுமான நிலையில் உள்ளன. பிரதமர் வீடு கட்டும் திட்டம் (நகர்ப்புறம்) 1.0, மார்ச் 2024ல் முடிவுக்கு வந்த நிலையில், மத்திய அரசு, பிரதமர் வீடு கட்டும் திட்டம் (நகர்ப்புறம்) 2.0 என்கிற புதிய திட்டத்தை செப்டம்பர் 2024-ல் அறிமுகப்படுத்தியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *