
மறைமலை நகர்: மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது என அதிமுக வர்த்தக பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சீ.த.செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி அதிமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 29-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வர்த்தக பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சீ.த.செல்லப்பாண்டியன் பங்கேற்று கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.