
சென்னை: ஆசிரியர்களை தரக்குறைவாகப் பேசிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், “சமீபகாலமாக பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் மாவட்ட ஆட்சியரின் தலையீடுகளும், ஆசிரியர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசுவதும், குற்றவாளிகளைப் போல பொது வெளியில் திட்டும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளின் சூழல்களை மதிப்பிடாமல் 100 சதவீத தேர்ச்சியை மட்டும் பார்க்கக்கூடாது. ஒரு மாவட்டம் 100 சதவீத தேர்ச்சி பெற்றுவிட்டால் அதன் ஆட்சியருக்கு பாராட்டும், தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்பதும் சரியானதல்ல.