
நாகர்கோவில்: குளச்சல அருகே வாணியக்குடியில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. அதிலிருந்து எண்ணெய் படலம் பரவுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலம் கொச்சி கடல் பகுதியில் லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் சமீபத்தில் மூழ்கியது. அதில் இருந்த 640 கன்டெய்னர்கள் கடலிலே மூழ்கின. அவை கேரளா கடலோரப் பகுதி உட்பட ஆங்காங்கே கடற்கரைகளில் கரை ஒதுங்கி வருகின்றன. தற்போது கன்டெய்னர்களில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியகுடி கடற்கரையில் கரை ஒதுங்கி இருக்கிறது. இது மீனவர் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்திருக்கிறது.