
ஓசூர்: “நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறியதை, பாஜக திட்டமிட்டு இரு மாநில பிரச்சனையாக மாற்றி உள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கன்னட மக்களுக்கு கன்னட மொழி சிறந்தது என சொல்லிக்கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. கன்னட மக்கள் அவர்களது மொழியை வளர்ப்பதற்காகவும் மற்றும் பெருமை பேசிக்கொள்வதற்கும், அவர்களுக்கு எந்த தடையும் இல்லை.