
சென்னை: “நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது” என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் இன்று (மே 29) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரிடம், நகைக் கடன்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளது இது கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்துமா என்று கேட்கப்பட்டது.