• May 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “வணிகத்தைப் பயன்படுத்தி இந்தியா – பாகிஸ்தான் போரை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 11 நாட்களில் 8 முறை கூறிவிட்டார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி முற்றிலும் மவுனமாக இருக்கிறார்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், "கடந்த 11 நாட்களில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் போர் நிறுத்தம் தன்னால் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 8 முறை கூறியுள்ளார். மேலும், இதற்காக வரிகளைப் பயன்படுத்தியுள்ளேன் என்றும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினால் சர்வதேச வர்த்தகம் அதிகரிக்கும் என்று இரு நாடுகளிடமும் கூறியுள்ளேன் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *