
அலிப்பூர்துவார்: வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலைவாய்ப்பின்மை, ஊழல், உரிமைகள் பறிப்பு என 5 பிரச்சினைகளால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாநில மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.