• May 29, 2025
  • NewsEditor
  • 0

“50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறும் வித்தையை தெரிந்து வைத்துள்ள மருத்துவர் அய்யா, மகனையும் கட்சியையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தையை படிக்க மறந்துவிட்டாரே” – பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் அதிகார யுத்தத்தை அரசியல் வட்டாரத்தில் இப்படித்தான் பேசுகிறார்கள்.

பாமக பொதுக்​குழு​வில், தனது மகள் வழி பேரனை பாமக இளைஞர் சங்க தலை​வ​ராக ராம​தாஸ் அறி​வித்​த​தில் வெளிப்​படை​யாக வெடித்த அப்பா – பிள்​ளைக்​கான அதி​கார யுத்​தம் இருக்க இருக்க உக்​ர​மாகிக் கொண்டே தான் போகிறது. இந்த நிலை​யில், தனது அதி​காரத்தை நிலைநிறுத்​திக் காட்ட பாமக மற்​றும் வன்​னியர் சங்க நிர்​வாகி​களை அழைத்து ராம​தாஸ் நடத்​திய ஐந்து ஆலோ​சனைக் கூட்​டங்​களும் பிசுபிசுத்​துப் போய்​விட்​டன. கட்​சிக்​குள் இனி அன்​புமணி தான் எல்​லாமே என தெளி​வாக தெரிந்து போன​தால் பெரு​வாரி​யான நிர்​வாகி​கள் தோட்டத்து ஆலோ​சனைக் கூட்​டங்​களை தைரிய​மாகப் புறக்​கணித்து விட்​டனர். இதில் 3 எம்​எல்​ஏ-க்​களும் உள்​ளடக்​கம்.

தனது ஆலோ​சனை கூட்​டத்​துக்கு வரா​மல் புறக்​கணிப்​பவர்​களை தயவு பார்க்​காமல் பொறுப்​பிலிருந்து நீக்​கும் முடி​வில் தான் ராம​தாஸ் முதலில் இருந்​தா​ராம். ஆனால், சுமார் 80 சதவீதத்​துக்​கும் மேற்​பட்ட நிர்​வாகி​கள் புறக்​கணித்​த​தால், கட்சி நலன் கருதி யாரை​யும் கைவைக்க முடி​யாமல் பொறுமை காக்​கி​றா​ராம் மருத்​து​வர். அதேசம​யம், வெளிப்​படை​யாகப் பார்த்​தால் இது அதி​காரப் போட்​டி​யாக தெரிந்​தா​லும் உள்​ளுக்​குள் வேறு பல கணக்​கு​களும் ஓடிக்​கொண்​டிருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *