• May 29, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். ஏராளமான வீடு மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.

மும்பைக்கு அடுத்த படியாக தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பக்கம் அமிதாப்பச்சனின் பார்வை திரும்பி இருக்கிறது.

அமிதாப்பச்சன் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை சுற்றி தொடர்ந்து நிலம் வாங்கி வருகிறார். தற்போது புதிதாக ராமர் கோயில் அருகில் ரூ.40 கோடியில் 25 ஆயிரம் சதுர அடி நிலத்தை வாங்கி இருக்கிறார். இந்த நிலத்தில் அமிதாப்பச்சன் தனது வீட்டை கட்ட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்க செய்தியில், ”பாரம்பரியமும் நவீனத்துவமும் இணைந்திருக்கும் அயோத்தியின் ஆன்மாவுக்குள் இதயப்பூர்வமான பயணத்தின் தொடக்கம் இது. உலகின் தலைசிறந்த ஆன்மிகத் தலைநகரில் எனது வீட்டைக் கட்ட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப்பச்சன் அயோத்தியில் ஏற்கெனவே மூன்று இடங்களில் நிலம் வாங்கி இருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் முன்பாக ரூ.4.54 கோடிக்கு 5372 சதுர அடி நிலத்தை வாங்கினார்.

அதன் பிறகு சராயு நிறுவனம் மேம்படுத்திய நிலத்தில் ரூ.14.50 கோடிக்கு நிலத்தை வாங்கினார். அதோடு அயோத்தியில் 54 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் அமிதாப்பச்சன் வாங்கி இருக்கிறார். அந்த நிலத்தில் அமிதாப்பச்சன் தனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனுக்கு நினைவுச்சின்னம் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப்பச்சன்

தற்போது அமிதாப்பச்சன் வாங்கி இருக்கும் நிலத்தையும் சராயு நிறுவனம்தான் மேம்படுத்தி விற்பனை செய்துள்ளது.

அயோத்தியில் இருந்து அமிதாப்பச்சனின் சொந்த ஊரான பிரயக்ராஜ் நகரத்திற்கு எளிதில் சென்றுவிட முடியும். எனவேதான் ஆன்மிக நகரில் தொடர்ந்து அமிதாப்பச்சன் நிலத்தில் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறார்.

அமிதாப்பச்சன் அடுத்ததாக செக்‌ஷன் 84 படத்தில் நடிக்கிறார். அதோடு பிரமாஸ்தரா மற்றும் கல்கி 2898 ஏடி என்ற படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். இது தவிர கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *