• May 29, 2025
  • NewsEditor
  • 0

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந்தியா, பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைக் குறிவைத்து, அதிரடியாக நடத்தியது.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதலை மே 8 ஆம் தேதி இரவு நடத்தியது. அதனை வானிலேயே தடுத்து அழித்ததாக தெரிவித்தது இந்திய ராணுவம்.

“ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கை, ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை ராணுவ வீரர்கள் இரவு, பகல் என 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எல்லை பகுதியான தாரா வாலி கிராமம் முழுவதும் துப்பாக்கிச் சூடு எதிரொலித்தபோது, ​​10 வயது ஷ்ரவன் சிங் என்ற சிறுவன், இதில் அமைதியாக தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

”வளர்ந்ததும் நாட்டிற்காக சேவை செய்ய விரும்புவதாகவும், பெரியவன் ஆனதும் ராணுவத்தில் பணியாற்ற விரும்புவதாகவும்” அச்சிறுவன் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த ராணுவ வீரர்களின் தாகத்தை ஷ்ரவன் தீர்த்து வைத்ததை அடுத்து ராணுவ உயர் அதிகாரியிடம் பாராட்டை பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் மம்டோட் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனான ஷ்ரவன், தனது கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கு தண்ணீர், ஐஸ், தேநீர், பால், லஸ்ஸி போன்றவை கொடுத்து அவர்களின் தாகத்தை தீர்த்துள்ளார்.

சிறுவனின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் அதிகாரி மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங், சிறுவன் ஷ்ரவனுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *