
சென்னை: ‘‘தமிழக மீனவர்களின் இன்னல்கள் எல்லாம் தீர கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, திருவொற்றியூரில், மீன்வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.272.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உட்பட ரூ. 426 .13 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் ரூ. 170 கோடி மதிப்பில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதுதவிர, தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிகளுக்கு ரூ.10 .67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: