
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அலங்காரமாதா தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கிங்சிலி(36). இவர் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். ரூபன் கிங்சிலி அந்தோணியார் தெருவை சேர்ந்த ஜாண்குமார்(36) என்பவரிடம் பல தவணையாக ரூ.3.50 லட்சம் கடன் வாங்கியுள்ளர். அதற்கு ரூபன் குங்சிலி மாதம் தோறும் வட்டி செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மூன்றரை லட்சம் ரூபாய் வாங்கியதற்கான ஆதாரமாக 500 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டுதரும்படி ரூபன் கிங்சிலியிடம் பல நாட்களாக கேட்டு வந்துள்ளார் ஜாண்குமார். கையெழுத்து போடாமல் ரூபன் கிங்சிலி நாட்களை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரூபன் கிங்சிலியின் மனைவி ஆன்றோ அனிற்றா(34)-வின் சகோதரருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. இதற்காக ரூபன் கிங்சிலி மனைவியின் வீடான கடியபட்டணத்துக்கு சென்றார். அங்கு அவர் நேற்று முந்தினம் இரவு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஜாண் குமார் அங்கு சென்று ரூபன் கிங்சிலியிடம் வட்டி தொகையை கேட்டுள்ளார். ஒரு மாதத்துக்கான வட்டியாக 7000-ரூபாயை கொடுத்துள்ளார்.
வட்டி தொகையை பெற்றுக் கொண்ட ஜாண்குமார், `500 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டு தரமாட்டாயா?’ என கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார். வாக்குவாதம் தகராறாக மாறியதை அடுத்து ஜாண்குமார் தனது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரூபன் கிங்சிலியை குத்தியிருக்கிறார். கத்தியை தடுத்ததால் ரூபன் கிங்சிலியின் கையில் காயம் ஏற்பட்டு கிழே சாய்ந்தார். ஆனாலும் விடாத ஜாண்குமார் கீழே விழுந்த ரூபன் கிங்ஸ்லியின் நெஞ்சில் சரமாரியாக குத்தினார். இதில் ரூபன் கிங்சிலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ரூபன் கிங்சிலியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதையடுத்து ஜாண்குமார் அங்கிருந்து தபினோடிவிட்டார். இதுகுறித்துரூபன் கிங்சிலியின் மனைவி ஆன்றோ அனிதா மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிதார். உடனே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரூபன் கிங்ஸ்லி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஜாண்குமார் மணவாளகுறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.