
புதுடெல்லி: “பயங்கரவாத தாக்குதல்களுக்கான இந்தியாவின் பதிலடி பற்றி மட்டுமே நான் பேசினேன். முந்தைய போர்களைப் பற்றி அல்ல என்பதை பொங்கி எழும் வெறியர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று தன்னை விமர்சிப்போருக்கு சசி தரூர் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பனாமாவில் ஒரு நீண்ட மற்றும் வெற்றிகரமான நாளுக்குப் பிறகு, ஆறு மணி நேரத்தில் கொலம்பியாவின் போகோடாவிற்குப் புறப்படுவதற்காக நள்ளிரவில் நான் செல்ல வேண்டும். எனவே இதற்கு எனக்கு உண்மையில் நேரமில்லை. எனினும், கடந்த காலங்களில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய வீரம் பற்றிய எனது அறியாமையைப் பற்றிப் பொங்கி எழும் வெறியர்களுக்காக நான் கூற விரும்புவது இதுதான்.