• May 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: விரைவில் தொடங்கப்பட உள்ள மத்திய வக்பு போர்ட்டலின் தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படாத வக்பு சொத்துகள் விலக்கி வைக்கப்படும். இவை மத்திய தரவுத் தளத்தில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவு தளம், “ தயாரிப்பு-சரிபார்ப்பு-அனுமதி" ஆகிய மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த போர்ட்டல் வரும் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர்ட்டல் தற்போதைய வக்பு தரவு களஞ்சியமான இந்திய வக்பு சொத்து மேலாண்மை (டபிள்யூஏஎம்எஸ்ஐ) அமைப்புக்கு மாற்றாக இருக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *