
புதுடெல்லி: இந்தியாவைத் தாக்க நினைக்கும் தீவிரவாதிகள் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என்பதை உணர்ந்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நிலையை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்துவதற்காக அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தலைவர்களுக்கு விளக்கி வருகின்றனர்.