
புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருடப்படும் செல்போன்கள், கண்டறியப்பட்டு வெற்றிகரமாக உரியவர்களிடம் சேர்க்கப்படும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதற்காக போலீஸார் உதவியுடன் மத்திய அரசு நடத்தும் இணையதளம் உதவி வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் பலர் தங்களது செல்போன்களை தவறவிடுகின்றனர். மேலும் சிலர், திருடர்களிடம் தங்களது செல்போன்களை பறிகொடுக்கின்றனர். அதேநேரத்தில் திருடப்படும் செல்போன்கள் குறித்து போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் குறைவாகவே உள்ளன. இருந்தபோதும் புகார் தரப்பட்ட செல்போன் திருட்டுகள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து அவற்றைக் கண்டறிந்து வருகின்றனர்.