
கடப்பா: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் நாளான நேற்று என்.டி.ராமாராவின் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும், அக்கட்சியின் தேசிய தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பிறகு சந்திரபாபு நாயுடு மாநாட்டில் பேசியதாவது: 1995-ம் ஆண்டு முதல் இப்போது வரை 30 ஆண்டுகள் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவராக உள்ளேன். இப்போது மீண்டும் 2 ஆண்டுகளுக்கு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் தவறாமல் நிலை நாட்டுவேன்.