
சென்னை: தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் கடுமையான கவலையை தெரிவிக்கவே இக்கடிதம் எழுதுகிறேன்.