
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் உரிமமின்றி கனிமங்களை ஏற்றிச் சென்ற 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் கனிம வளத்துறை சார்பில், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் மணல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமை வகித்துப் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தடுக்க உரிய வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.