
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தீர்ப்பை சுட்டிக்காட்டி, அவதூறுகளை அள்ளித் தெளித்த எதிர்க்கட்சியினரின் எண்ணம் தவிடுபொடியானதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில், கைதாகி சிறையில் உள்ள ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி நேற்று தீர்ப்பளித்தார். ஞானசேகரனுக்கான தண்டனையை வரும் ஜூன் 2-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.