• May 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னையில் கரோனா தொற்றால் 65 வயது முதியவர் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

கடந்த 2023-ல் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த ஜனவரியில் தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு பூஜ்ஜிய நிலையை எட்டியது. பின்னர், அவ்வப்போது ஓரிருவர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *