
சென்னை: தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகள் காலியாகின்றன. இதில் திமுக சார்பில் 4 வேட்பாளர்களையும், அதிமுக சார்பில் 2 வேட்பாளர்களையும் நிறுத்துகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் காங்கிரஸூக்கு ஒரு இடத்தை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.