
சென்னை: 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சுதந்திரப் போராட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்த தவறான தகவலை நீக்கக் கோரி எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42 வது ராஜா சந்திர சைதன்யா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இது தொடர்பாக சந்திர சைதன்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தனிப்பெரும் நாகரிகமும், வரலாறும் கொண்ட மண். இந்த மண்ணின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது எங்களின் எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், உமறுப் புலவர், இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் என வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எங்கள் எட்டயபுரம்.