
“நீதிமன்ற தீர்ப்பின்படி அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்” என்று சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அவர்களை வேறு இடத்திற்கு குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு. அனகாபுத்தூரில் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நகர், மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர் மக்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர்.