
சிவகாசி: நிதி ஆயோக் கூட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக புறக்கணித்த தமிழக முதல்வர், இந்த முறை சென்றது அரசியல், தேர்தல், வாக்கு வங்கி கண்ணோட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது, என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்தார்.
சிவகாசியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜபாண்டி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாஜக, அதிமுக, தமாக உள்ளிட்ட ஒத்த கருத்துகள் கொண்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி தமிழகத்தில் வெற்றிக் கூட்டணியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.