
சென்னை: மாநில உரிமைகளை நிலைநாட்டி, தனிச் சிறப்பான பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று மாநிலங்களவை தேர்தலுக்கு தேர்வாகியுள்ள கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: " வரும் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.