
திருப்புவனம்: தமிழர்கள் வரலாற்றை மத்திய அரசு மறைக்கிறது என்பது தவறான தகவல் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக, பாஜக, தமாகா மற்றும் பல ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. இது மக்கள் நம்பிக்கை பெற்ற முதன்மை கூட்டணியாக உள்ளது. இந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும். தமிழக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேர வேண்டும்.