
சென்னை: “அதிமுக திட்டங்களுக்குதான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தான் ஒரு பொம்மை முதல்வர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார் ஸ்டாலின்.