
சென்னை: “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், திமுக அரசின் கீழ் செயல்படும் காவல் துறையால் தான் ஐந்தே மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றம் ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் எரிகிறது?” என்று அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு அரைவேக்காடு என்பதை அவரே அம்பலப்படுத்திக்கொள்கிறார். உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உண்மை தான். அந்த எஸ்ஐடி தமிழ்நாடு காவல் துறைகோ திமுக அரசுக்கோ தொடர்பு இல்லாததா? அந்த எஸ்ஐடி வேறு மாநில அதிகாரிகளோ மத்திய அரசின் அதிகாரிகளோ இல்லை. அவர்கள் தமிழக அரசின் காவல் துறை தானே?