• May 28, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “திரைப்பட விழாவில் தமிழ்- கன்னட மொழி குறித்து சர்ச்சையாக பேசிய கமலை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்ய வேண்டாம்,” என திமுகவுக்கு இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என பேசியது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது. திரைப்பட விழாவில் சம்பந்தம் இல்லாமல் தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கன்னட மக்களை புண்படுத்தும் விதமாகவும், இரு மாநில சமூக அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் மொழி பிரச்சினையை உண்டாக்கும் விதமாகவும் திட்டமிட்டு பேசிய கமலை கண்டிக்கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *