
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசுவதில், பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசி தரூர் திகழ்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறது.