
பனாமா சிட்டி: இந்தியா அமைதியை விரும்பினாலும், பாகிஸ்தான் அதற்கு தயாராக இல்லை என்று பனாமா நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய குழுவுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடான பனாமாவில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து உரையாடியது.