
மும்பையில் தனது பெயருக்கு வீட்டை எழுதிக்கொடுக்காததால் தந்தையின் காலை அவரது மகன் அடித்து உடைத்துள்ளார்.
மும்பை தகிசர் கிழக்குப் பகுதியில் வசிப்பவர் விஜய் (73). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கிஷோர் கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இளைய மகன் மிதுன், தகிசரில் விஜய் வீட்டிற்கு அருகில் வசிக்கிறார்.
அடிக்கடி மிதுன் தனது தந்தையைச் சென்று பார்த்து தேவையான உதவிகளைச் செய்து வந்தார். விஜய்க்கு மும்பை ஜோகேஸ்வரியில் ஒரு படுக்கை அறை கொண்ட வீடு இருக்கிறது.
இந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் விஜய் வாழ்ந்து வந்தார். ஆனால் அந்த வீட்டைத் தனது பெயருக்கு எழுதிக்கொடுக்கும்படி கூறி விஜய்யிடம் அவரது மகன் கிஷோர் நிர்ப்பந்தம் செய்து வந்தார்.
தனது மரணத்திற்குப் பிறகுதான் அந்த வீடு உனக்குக் கிடைக்கும் என்று விஜய் தெரிவித்தார். சம்பவத்தன்று விஜய் வீட்டிற்கு கிஷோர் வந்தார்.
விஜய்யிடம் ஜோகேஸ்வரி வீட்டைத் தனது பெயருக்கு எழுதிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் இப்போது எழுதிக்கொடுக்க முடியாது என்றும், இறந்த பிறகு எடுத்துக்கொள்ளும்படியும் தெரிவித்தார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபமான கிஷோர், வீட்டில் கிடந்த கம்பை எடுத்து தந்தை விஜய்யின் காலில் கிஷோர் சரமாரியாக அடித்தார்.
இதில் விஜய் கீழே விழுந்தார். அப்படி இருந்தும் கிஷோர் அடித்தார். விஜய்யின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர்.

அவர்கள் விஜய் மகன் மிதுனுக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். மிதுன் ஓடி வந்து தனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்தார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது இரண்டு கால்களும் உடைந்திருந்தன.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கிஷோரைத் தேடி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY