
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடர்கிறது. அவலாஞ்சியில் நான்காம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் பருவமழை பரவியுள்ளதாகவும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகவும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பாதிப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது.