
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் தாமேஷ்வர்நாத் கோயிலும் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான அடிக்கல்லை முதல்வர் யோகி ஆதித்யநாத் நாட்டினார்.
இந்தியாவில் அதிகமான முக்கியப் புனிதத் தலங்கள் கொண்ட மாநிலம் உபி. இம்மாநிலத்தில் உள்ள முக்கியக் கோயில்கள் பாஜக ஆட்சியில் படிப்படியாகப் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்படுகின்றன.இதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பாஜக அரசு செலவிட்டு வருகிறது. முதலாவதாக காசி எனும் வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயில் புனரமைக்கப்பட்டது.