• May 28, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நாவிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், துளையனூர் பஞ்சாயத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.

இவரது மகன் உதயம் (வயது: 19). இவர், ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அருகே உள்ள சோளத்தா கோயிலில் நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களுக்காகக் காலையில் தண்ணீர்ப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகே போக்கஸ் லைட் கட்டப்பட்டிருந்த கம்பியில் தெரியாமல் உதயம் கை வைத்துள்ளார். அப்போது, அவர்மீது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.

uthayam

இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, உயிரிழந்த கல்லூரி மாணவரின் உடல் உடற்கூறு ஆய்விற்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து திருமயம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழா ஏற்பாட்டின்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *