• May 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் 28 வார கருவைக் கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 80 சதவீத மாற்றுத்திறனாளியான 27 வயது இளம்பெண்ணை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்காரணமாக அந்த பெண் கருவுற்றுள்ளார். இதுதொடர்பாக அந்தப்பெண்ணின் தாயார் அளித்த புகாரின்பேரில் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *