
சுக்மா: போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட பசவராஜுவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஒருவர் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். சிதறுண்டு வரும் நக்சலைட்டுகளின் இயக்கம் குறித்து அவர் வெளிப்படையான தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் நம்பல கேசவ் ராவ் என்கிற பசவராஜு. இவருடன் மொத்தம் 27 மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.