
புதுடெல்லி: இந்தியாவில் ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தாயரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானுக்கு இத்தகைய போர் விமானங்களை வழங்கும் திட்டத்தை சீனா விரைவுபடுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ராஜ்நாத் சிங் இதற்கான ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக ரபேல் உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல், நான்காம் தலைமுறை போர் விமானம் ஆகும். உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் உள்ளன.