• May 28, 2025
  • NewsEditor
  • 0

'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் தென்கொரியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்சிபெற்ற 6 மாணவ, மாணவிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் சிறந்த திறமையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கும் (ஸ்கவுட்) திட்டத்தின் கீழ், பயோமெடிக்கல் மற்றும் நானோ பொருட்களின் ஆற்றல் பயன்பாடுகள், சூரிய மின்கல தொழில்நுட்பம் மற்றும் நிலையான ஆற்றல் கண்டுபிடிப்புகள் தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சி பயிற்சிக்காக 6 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பயிற்சிக்காக அரசு செலவில் தென்கொரியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *