
சென்னை: உலக மாதவிடாய் சுகாதார தினம் ஆண்டுதோறும் மே 28-ம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் உள்ள தயக்கத்தைப் போக்குவதற்கும், தவறானப் புரிதல்களைக்களையவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஜெர்மனியில் உள்ள வாஷ் யுனைடெட் தொண்டு நிறுவனத்தால் 2013-ல் மாதவிடாய் தினம் தொடங்கப்பட்டு, 2014 முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் மாதவிடாய் சுகாதார தினத்தின் கருப்பொருள் ‘மாதவிடாய் விழிப்புணர்வுமிக்க உலகம்’ என்பதாகும். மாதவிடாய் சுகாதார தினம் மருத்துவர்கள் கூறியதாவது: பெண்களுக்கு மாதவிடாய் என்பது 28 முதல் 35 நாட்களுக்குள் சுழற்சி முறையில் நடைபெறக்கூடியது. மாதவிடாய் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் இருக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சுகாதாரம் முக்கியம் என்பதால் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.