
திருப்பூர்: கோடாங்கிபாளையம் கல் குவாரி கனிம முறைகேடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உரிய அபராதத் தொகையை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடாங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கல் குவாரி, விதிமீறி இயங்குவதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் கடந்த 2022-ம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். இந்நிலையில் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட கல்குவாரி உரிமத்தை, அப்போதைய மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தற்காலிகமாக ரத்து செய்தார்.