• May 27, 2025
  • NewsEditor
  • 0

கோவை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்வதால் 3-வது நாளாக இன்றும் (மே 27) பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.சிறுவாணி அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவ மழைக் காலத்தையொட்டி, கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்தது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மலைப் பகுதிகளில், பில்லூர் மற்றும் சிறுவாணி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ள, பில்லூர் அணை கடந்த 25-ம் தேதி நள்ளிரவு நிரம்பியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *