
புதுடெல்லி: ஜூன் மாதம் பருவமழை வலுக்கும் காலத்தில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக்கான முன்கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் மாற்றியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்பின்படி, நீண்ட கால சராசரி மழையளவு 106 சதவீதம் பெய்யும் என்றும், அதில் 4 சதவீதம் வரை கூடுதல், குறைவாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.