• May 27, 2025
  • NewsEditor
  • 0

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதியே கடைசி நாள். ஆனால், இந்த ஆண்டு (2025) கடைசி நாளை செப்டம்பர் 15-ம் தேதிக்கு மாற்றியுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT).

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான PORTAL கடந்தாண்டு ஏப்.16ம் தேதியே திறக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு மே.27 -ம் தேதி ஆகியும் E Filing PORTAL திறக்காததால் லட்சக்கணக்கானோர் குழப்பம் அடைந்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் தாமதம் ஏற்பட்டதாக கூறினர்.

இந்நிலையில், இதுகுறித்து CBDT வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…

நீட்டிப்பிற்கு காரணம் என்ன?

2025-26 மதிப்பீட்டிற்கு ஆண்டுக்கான, புதிய ITR படிவங்கள் எளிமையாகவும், வெளிப்படையாகவும், துல்லியமாகவும் மாற்றப்பட்டுள்ளன.

வருமான வரி

இந்த மாற்றத்தால் வருமான வரி தாக்கல் செய்யப் பயன்படுத்தப்படும் அமைப்பு மற்றும் கருவிகளைப் புதுப்பிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.

மேலும், 2025-ம் ஆண்டு மே 31-ம் தேதிக்குள் தெரிய வரும் TDS தகவல்கள், ஜூன் மாத ஆரம்பத்தில் தான் தெரியும். அதனால்,மக்களுக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய சிரமமாக இருக்கும். வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் கடைசி தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாச நீட்டிப்பின் மூலம் மக்கள் எளிதாகவும், சரியாகவும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய முடியும்”.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *